blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, June 21, 2014

திருகோணமலையில் ஹோட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்


திருகோணமலையில் ஹோட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்திருகோணமலை பகுதியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவரைத் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர்.


இந்த தாக்குதல் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாகவுள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளருடன் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3  இளைஞர்களை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இந்த கைகலப்பின்போது காயமடைந்த 5 இளைஞர்கள் வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டதாக திருகோணமலை வைத்தியசாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►