விமானங்களை கடத்தும் தலிபான் தீவிரவாதிகள் மிரட்டுவது போல உள்நாட்டு மக்களை சிறைபிடித்து இலங்கை, இந்தியாவை மிரட்டுகிறது.
எனவே இலங்கையை சிங்கள தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும். - இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான். இன்று காலை நெல்லை சென்ற அவர் சிந்துபூந்துறை சாலை தெருவில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ‘இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்பட்டு வருகிறார்கள்.
மத்திய அரசு பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட இலங்கை ஜனாதிபதி, நல்லெண்ண அடிப்படையில் மீனவர்களை விடுதலை செய்வதாகக் கூறுகிறார்.
அப்படியானால் மீனவர்களை கைது செய்யும்போது அவருக்கு எந்த எண்ணம் இருந்தது. விமானங்களை கடத்தும் தலிபான் தீவிரவாதிகள் மிரட்டுவது போல உள்நாட்டு மக்களை சிறைபிடிக்கும் இலங்கை, இந்தியாவை மிரட்டுகிறது.
எனவே இலங்கையை சிங்கள தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும். இலங்கை தமிழர்களை தாக்கி இனவழிப்புச் செய்த சிங்களவர்கள் தற்போது இஸ்லாமியர்களையும் தாக்க தொடங்கியுள்ளனர். இதன்மூலம் இலங்கையில் தமிழ் இனத்தையே ஒழிக்க நினைக்கிறார்கள்.
இலங்கை ஜனநாயக நாடு என்று கூறுபவர்கள் இதை உணர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இடது சாரி கட்சியினர் சிந்திக்க வேண்டும். புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசு தமிழர்கள் நலனில் சிறப்பாக செயல்படும் என எண்ணுகிறோம். - என்றார் அவர்.
உங்கள் பதிவுகளை இங்கு இடுங்கள்
ReplyDelete