சிறுவர்
துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய வெளிநாட்டவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை
தடுக்கும் வகையில் விசேட செயற்றிட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச நாடுகளுடன் இணைந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அதிகார சபையின் தலைவர் அனோமா திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த
செயற்றிட்டம் காரணமாக அண்மையில் சிறுவர் துஷ்பிரயோகங்களுடன் தொடர்புடைய
வெளிநாட்டவர்கள் நாட்டுக்குள் பிரவேசிப்பதை தடுப்பதற்கான சந்தர்ப்பம்
கிடைத்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
இணைத்தளம் உள்ளிட்ட பல்வேறு
வழிகளை பயன்படுத்தி சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு தூண்டப்படுகின்றமை
தொடர்பிலும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இத்தகைய
குற்றச்செயல்களில் ஈடுபடுவோரிடமிருந்து பிள்ளைகளை பாதுகாக்க வேண்டிய
பொறுப்பு பெற்றோருக்கு உள்ளதாக அதிகார சபையின் தலைவர் மேலும்
குறிப்பிட்டுள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கையில் அதிகளவு பேசப்படம் விடயம் பட்டதாரிகளின் வேலையற்ற பிரச்சினை தொடர்பானதாகும்.
-
எதிர்வரும் 100 நாட்களுக்குள் இலங்கையின் மாபெரும் வீடமைப்பு திட்டமொன்றை ஆரம்பிக்கவிருப்பதாக வீடமைப்பு மற்றும் சமூர்தி அமைச்சர் சஜித் பிர...
-
SAMS LANKA HOLDINGS (PVT) LTD நிறுவனத்தின் ஏற்பாட்டில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின்...
-
பயணச் சீட்டுக்களின்றி ரயில்களில் பயணிப்போர்களிடமிருந்து அறவிடப்படும் தண்டப் பணத்தை இரு மடங்காக அதிகரிப்பதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்க...
No comments:
Post a Comment
Leave A Reply