காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி
ஆணைக்குழு மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்த இரண்டாம் கட்ட அமர்வில்
புதிதாக 212 முறைப்பாடுகளை பதிவுசெய்துள்ளது.
மட்டக்களப்பு
மாவட்டத்தில் காணாமற்போனோர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற 195
முறைப்பாடுகளுக்கான சாட்சி விசாரணைகள் இடம்பெற்றதாக காணாமற்போனோர் தொடர்பான
முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர்
எச.டபிள்யூ.குணதாச தெரிவித்தார்.
இந்த அமர்வில் பதிவுசெய்யப்பட்ட
சாட்சியங்களில் அதிகமானவை காத்தான்குடி – குருக்கள் மடத்தில் காணப்படுவதாக
கூறப்படும் மனித புதைகுழி தொடர்பிலேயே முன்வைக்கப்பட்டுள்ளன.
காணாமற்போனோர்
தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட சாட்சிப் பதிவுகள் கடந்த ஆறாம்
திகதி காத்தான்குடி பிரதேச செயலகத்தில் ஆரம்பமானது.
மட்டக்களப்பில் நேற்றைய தினத்துடன் அமர்வுகளை நிறைவு செய்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதனைத்
தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் அடுத்த மாதம் ஆணைக்குழுவின்
அமர்வுகள் இடம்பெறவுள்ளதாக அதன் செயலாளர் எச.டபிள்யூ.குணதாச தெரிவித்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, June 10, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஐ.பி.எல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டியொன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது. ப...
-
பூநகரிபிரதேச சபையினால் புதிதாக அமைக்கப்பட்ட சந்தை கட்டிடத்தொகுதி வெளிப்பிரதேச வியாபாரிகளுக்கு தாரைவார்த்து கொடுக்கப்பட்டுள்ளது என்று ஊடகங...
-
இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் பந்து வீச்சாளர்களின் சவாலை எதிர்கொள்ள இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் தயார்நிலையில் உள்ளதாக இலங்கை அணியின் ஆலோ...
-
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் சகோதரர் இன்று காலை மரணமடைந்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply