காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி
ஆணைக்குழு மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்த இரண்டாம் கட்ட அமர்வில்
புதிதாக 212 முறைப்பாடுகளை பதிவுசெய்துள்ளது.
மட்டக்களப்பு
மாவட்டத்தில் காணாமற்போனோர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற 195
முறைப்பாடுகளுக்கான சாட்சி விசாரணைகள் இடம்பெற்றதாக காணாமற்போனோர் தொடர்பான
முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர்
எச.டபிள்யூ.குணதாச தெரிவித்தார்.
இந்த அமர்வில் பதிவுசெய்யப்பட்ட
சாட்சியங்களில் அதிகமானவை காத்தான்குடி – குருக்கள் மடத்தில் காணப்படுவதாக
கூறப்படும் மனித புதைகுழி தொடர்பிலேயே முன்வைக்கப்பட்டுள்ளன.
காணாமற்போனோர்
தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட சாட்சிப் பதிவுகள் கடந்த ஆறாம்
திகதி காத்தான்குடி பிரதேச செயலகத்தில் ஆரம்பமானது.
மட்டக்களப்பில் நேற்றைய தினத்துடன் அமர்வுகளை நிறைவு செய்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதனைத்
தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் அடுத்த மாதம் ஆணைக்குழுவின்
அமர்வுகள் இடம்பெறவுள்ளதாக அதன் செயலாளர் எச.டபிள்யூ.குணதாச தெரிவித்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, June 10, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
The BA is a 3 year programme starting at Level 3. Each year is divided into two semesters. Each semester you can offer courses worth a ma...
-
Diploma in Youth Development is a programme offe...
-
MA Degree programme is a 2 year post-graduate course which is conducted in English medium only. It has 15 taught modules covering an arra...
-
களுத்துறை மாவட்டத்தின் மண்சரிவு அபாய எச்சரிக்கை காணப்படும் பகுதிகளில் உள்ள 320 குடும்பங்களை சேர்ந்தவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு தே...

No comments:
Post a Comment
Leave A Reply