கிளாலிக் கடற்கரை மணலில் புதைந்திருந்த மிதிவெடி வெடித்ததில் படுகாயமடைந்த பாடசாலை மாணவனின் கால் முழங்காலின் கீழ் அகற்றப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
கிளாலிப் பகுதியில் நேற்றுச் சனிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதே இடத்தைச் சேர்ந்த உதய குமார் கவிதரன் (வயது 14) என்ற பாடசாலை மாணவனின் வலது கால் முழங்காலின் கீழ் சத்திரசிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளது.
கிளாலி மகா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் குறித்த சிறுவன், பாடசாலை விடுமுறை தினமாகிய நேற்றுச் சனிக்கிழமை காலை தனது நண்பர்களுடன் கிளாலிக் கடற் கரையில் விளையாடுவதற் குச் சென்றுள்ளார்.
கடற்கரை ஓரமாக சிறிது தூரம் நடந்து சென்ற வேளை மணலில் புதைந்திருந்த மிதிவெடி வெடித்துள்ளது. சம்பவத்தின் போது உடனிருந்த நண்பர்கள் சிறுவனின் அருகில் சென்று பார்த்தபோது அவன் இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அவனை மீட்டு அருகில் இருந்த ஓட்டோ மூலம் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதித்தனர். அதன் பின்னர் சிறுவனின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரி வைத்தியசாலையில் சிறுவனுக்கு முதலுதவி வழங்கிய பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் சிறுவனின் வலது கால் முழங்காலுக்குக் கீழ சத்திர சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டதாகச் சிறுவனின் பெற்றோரும் உறுதிப்படுத்தினர்.
அதேவேளை, கிளாலி பகுதியில் மிதிவெடி அகற்றும் பணி நிறைவடைந்து விட்டதாக மிதி வெடி அகற்றும் நிறுவனத்தினர் கூறி வருகின்ற போதிலும் அங்கு முழுமையாக மிதிவெடிகள் அகற்றப்படவில்லை.
அதனால் பல பகுதிகளுக்குச் செல்ல முடியாமல் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்தனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, June 1, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...
-
ஆங்கிலத்தில் கோபத்தின் விளைவை DANGER என்பார்கள் எப்படி என்றால் ANGER என்றால் கோபத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாகும் அதன் D முன்...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
காணாமல் போன மலேசிய விமானத்தை கடலுக்கடியில் தேடும் பணிகள் அடுத்த வாரமளவில் நிறைவுக்கு கொண்டு வரவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
Leave A Reply