
கட்டுமாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக இந்தியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
தீயணைப்பு வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் பொலிஸார் இணைந்து மீட்புப் பணிகளை தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.
அத்துடன் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை விபத்தில் உயிரிழந்த ஆந்திர தொழிலாளர்களின் குடும்பத்துக்கு தலா 5 இலட்சம் இந்திய ரூபா நிதியுதவி வழங்கப்படும் என அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
இதேவேளை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 இலட்சம் இந்திய ரூபாவும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாவும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்குவதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை டெல்லியில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் ஐந்து சிறுவர்கள் உள்ளிட்ட 10 பேர் பலியாகியுள்ளனர்.
தரக்குறைவான கட்டுமாணப் பொருட்கள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் உள்ள குறைபாடுகளே இந்தியாவின் கட்டடங்கள் இடிந்து வீழக் காரணம் என குற்றஞ்சாட்டப்படுகின்றது.
No comments:
Post a Comment
Leave A Reply