பாரதத்தின் 15ஆவது பிரதமராக பாரதீய ஜனதாக் கட்சியின் நரேந்திர மோடி பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையான ராஷ்ட்ரபதி பவனில் இந்த பதவிப் பிரணமான நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
இந்த
வைபவத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி
ஹமீட் கர்ஷாய், மாலைத்தீவு ஜனாதிபதி அப்துல்லாஹ் யாமின், இலங்கை ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸ, பூட்டான் பிரதமர் ஷெரிங்க் டொப்கே மற்றும் நேபாள பிரதமர்
சுஷில் கொய்ரால ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக்
ஹசினா ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதால் அவர் சார்பில் பங்களாதேஷ்
சபாநாயகர் ஷிரின் ச்சௌத்திரி இந்தியப் பிரதமரின் பதவியேற்பு வைபவத்தில்
கலந்துகொண்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ்
கட்சியின் தலைவர் சோனியா காந்தி இந்தியப் பிரதமரின் பதவிப் பிரமாண
நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
இந்தியாவிலுள்ள மாநிலங்களின்
முதலமைச்சர்களுக்கு இந்த வைபவத்தில் கலந்துகொள்வதற்கான அழைப்பு
விடுக்கப்பட்டிருந்தபோதிலும், தமிழக முதல்வர் ஜெயலிலிதா ஜெயராம் இந்தியப்
பிரதமரின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்துகொள்வதை நிராகரித்துள்ளார்.
இந்தியப்
பிரதமர் ஒருவரின் பதவிப் பிரமாண வைபவத்தில் அதிகளவிலான அரச தலைவர்கள்
கலந்துகொண்ட முதலாவது சந்தர்ப்பமாகவும் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண
வைபவம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
தெமட்டகொடை, தொடர்மாடி குடியிருப்பின் 4 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்...
-
ஆங்கிலத்தில் கோபத்தின் விளைவை DANGER என்பார்கள் எப்படி என்றால் ANGER என்றால் கோபத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லாகும் அதன் D முன்...
-
"தேர்தலில் நான் தோற்றிருந்தால் என்னை கொலை செய்திருப்பார்கள். அது மட்டுமல்லாது எனது உயிருக்கு ஆபத்து இருந்ததாலேயே அரசாங்கத்தை விட்டு வெள...
-
இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் மேலுமொரு அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.23 வயது ஆசிரியை ஒருவர் 3 மாணவர்களால் கடத்திச்செல்லப்பட்டு...

No comments:
Post a Comment
Leave A Reply