இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்த வேண்டும் என்று
கேட்டுகொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாட்டின் பல பாகங்களுக்கு விஜயம்
செய்து, இங்குள்ள உண்மையான நிலைமைகளை உங்களின் நாடுகளுக்கு
தெளிவுபடுத்துமாறு புதிய தூதுவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆறு நாடுகளின் தூதுவர்கள் தங்களுடைய
நியமனக்கடிதங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று திங்கட்கிழமை
அலரிமாளிகையில் வைத்து கையளித்தனர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
இலங்கைகக்கான தூதுவர்கள், இரு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்தவும் இலங்கை
மக்கள் தொடர்பிலான நற்செய்திகளையும் அடிமட்ட நிலைமைகளையும் தமது நாடுகளில்
தலைவர்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இலங்கையில் போருக்கு பின்னரான அபிவிருத்தி குறித்து ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ தூதுவர்களுக்கு விளக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம்
அறிவித்துள்ளது.
இந்த நிகழ்வில், பிரதி வெளிவிவகார அமைச்சர் நியேமால் பெரேரா, ஜனாதிபதியின்
செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சேனுகா செனவிரட்ன
ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இலங்கைக்கான கொங்கோ தூதுவர் பிலிக்ஸ் நகோமா ( வாசஸ்தலம் புதுடெல்லி),
ஆர்ஜன்டீன தூதுவர் ராகுல் இக்னாசியோ குவாஸ்டாவினோ ( வாசஸ்தலம் -
புதுடெல்லி) தென் கொரியா தூதுவர் சாங் வேங் சாம், பிலிப்பைன்ஸ் தூதுவர்
வின்சேன்டி விவியன்சியோ டி பண்டில்லோ ( வாசஸ்தலம் டாக்கா), பாலஸ்தீன
தூதுவர் சுஹைர் அஹமடல்லா சாஹிட், எல்- சல்வடோர் தூதுவர் கில்ஹெரிமோ ரூபியோ
பன்நெஸ் ( வாசஸ்தலம் புதுடெல்லி) ஆகியோரே தங்களுடைய நியமனக்கடிதங்களை
நேற்று கையளித்தனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, May 13, 2014
உண்மையை சொல்லுங்கள்: புதிய தூதுவர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாவற்காடு பகுதியில் யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின் போது சுமார் 1300 கிலோ மீன்கள் கைப்பற்றப்பட்...
-
நாள்தோறும் செய்யும் யோகப் பயிற்சியின் மூலம், தனது மனதையும் உடலையும் வலுவாக வைத்துள்ளார் 93 வயது நானம்மாள் பாட்டி. நானம்மாளின் சொந்த ஊர் ...
-
இலங்கையிலுள்ள தமிழர்களின் அபிலாஷைகளுக்கு தீர்வு காணக்கூடிய அரசியல் தீர்வொன்றையே இந்தியா விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.
-
திருகோணமலை நகர எல்லைக்குள் செயற்படும் தனியார் கல்வி நிலையங்கள் மாலை 6 மணிக்குப் பின்னர் பிரத்தியேக வகுப்புக்களை நடத்தக் கூடாதென நகர சபைக் ...
.jpg)
No comments:
Post a Comment
Leave A Reply