வடமாகாண பொது சுகாதார பரிசோதகர்கள் யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பிரதேச சபைகளின்கீழ் பணியாற்றிய பொது சுகாதார பரிசோதகர்களை சுகாதாரத் திணைக்களத்தின்கீழ் மாற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் தமது பிரச்சினைக்கு ஆக்கபூர்வமான தீர்வினை வடமாகாண சபை வழங்க வேண்டும் என இதன்போது பொது சுகாதார பரிசோதகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply