மூவின மக்களின் நன்மதிப்பைப் பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
ஏ.ஆர்.எம்.ஏ.காதர் ஹாஜியாரின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கும்
நாட்டிக்கும் பேரிழப்பாகும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்
சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது அனுதாபச் செய்தி தெரிவித்துள்ளார்.
பிரதி அமைச்சர் தனது அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்:
கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான காதர் ஹாஜியார் ஜனாதிபதி
பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின்
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் முக்கியமானவர்.
பல்வேறு அமைச்சுப் பொறுப்புகளை வகித்த இவர். சகல இன மக்களுக்கும் சேவை ஆற்றியவர். குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு அளப்பெரிய சேவையாற்றியதுடன் முஸ்லிம்கள் முகம் கொடுத்த பிரச்சினைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர்.
தனது அரசியல் வாழ்க்கையில் சகல இன அரசியல்வாதிகளுடனும் நல்லுறவை பேணி வந்தவர். இதனால் இவர் மூவின மக்களின் நன்மதிப்பையும் பெற்றார்.
அந்நாரின் மறைவையிட்டு துயருட்டிருக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அந்நாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.
யா அல்லாஹ் ! இந்த அடியானின் நன்மைகளை பொருந்திக் கொண்டு , அவருடைய
பாவங்களை மன்னித்து , அந்தப் பாவங்களை நன்மைகளாக மாற்றி சுவனத்தில்
புகுத்துவாயாக.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, October 4, 2015
மூவின மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர் காதர் ஹாஜியார் – பிரதி அமைச்சர் ஹரீஸ்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து 218 கிலோ மீட்டர் கிழக்கே உள்ள பதுல்லை மாவட்டத்தில் மலைப்பாங்கான இடத்தில் பல தேயிலைத்தோட்டங்கள் உள்ளன. ...
-
நிலச்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய பகுதிகள் சிலவற்றை தேசிய கட்டடங்கள் தொடர்பான ஆராய்ச்சி அமைப்பு அடையாளம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
-
தற்போது மலை நாட்டுப் பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறு அனர்த்த முகாமைத்துவ அ...
-
சீகிரிய ஓவியங்களில் வர்ணப் பேனையால் வரைந்தமையால் கைதான கல்முனையைச் சேர்ந்த பாடசாலை மாணவி பிணையில் விடுவிக்கப்பட்டள்ளார்.


No comments:
Post a Comment
Leave A Reply