மூவின மக்களின் நன்மதிப்பைப் பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
ஏ.ஆர்.எம்.ஏ.காதர் ஹாஜியாரின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கும்
நாட்டிக்கும் பேரிழப்பாகும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்
சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தனது அனுதாபச் செய்தி தெரிவித்துள்ளார்.
பிரதி அமைச்சர் தனது அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்:
கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான காதர் ஹாஜியார் ஜனாதிபதி
பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின்
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் முக்கியமானவர்.
பல்வேறு அமைச்சுப் பொறுப்புகளை வகித்த இவர். சகல இன மக்களுக்கும் சேவை ஆற்றியவர். குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு அளப்பெரிய சேவையாற்றியதுடன் முஸ்லிம்கள் முகம் கொடுத்த பிரச்சினைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர்.
தனது அரசியல் வாழ்க்கையில் சகல இன அரசியல்வாதிகளுடனும் நல்லுறவை பேணி வந்தவர். இதனால் இவர் மூவின மக்களின் நன்மதிப்பையும் பெற்றார்.
அந்நாரின் மறைவையிட்டு துயருட்டிருக்கும் குடும்பத்தினர், உற்றார், உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அந்நாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்த்திக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.
யா அல்லாஹ் ! இந்த அடியானின் நன்மைகளை பொருந்திக் கொண்டு , அவருடைய
பாவங்களை மன்னித்து , அந்தப் பாவங்களை நன்மைகளாக மாற்றி சுவனத்தில்
புகுத்துவாயாக.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, October 4, 2015
மூவின மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர் காதர் ஹாஜியார் – பிரதி அமைச்சர் ஹரீஸ்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத் துள்ளார் உயர் தர வகுப்பில் கல்...
-
தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் உள்ளவர்களிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 1333 என்ற இலவச தொலைபேசி எண்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது....
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாதென்றும், அதனை பா.ஜ.க. அனுமதிகக் கூடாதென்றும் கோரி, தமிழகத்திலுள்ள பா....
-
காபூல்: ஆப்கானிஸ்தானில் கடந்த 3 நாட்களாக பெய்த கடும் மழை வெள்ளத்தில் சிக்கி 100 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து...


No comments:
Post a Comment
Leave A Reply