மகிந்தராஜபக்ஷ மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக மீண்டும் அரசியலுக்கு வர முயற்சிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜே.வி. பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி இதனைத் தெரிவித்துள்ளார்.
மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு பிரதமராக தெரிவாவதற்கு மகிந்தராஜபக்ஷ முயற்சிக்கிறார்.
மக்களின் அழைப்பின் பேரிலேயே தாம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அவர் கூறுகிறார்.
ஆனாலும், அவரது உள்நோக்கம் வேறு என்று ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில்
தற்போது பல்வேறு சக்திகள் ஐக்கிய தேசிய கட்சியின் பால் திரும்பி இருப்பதாக
அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
இதனால் மகிந்தவின் மீள்வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சுதந்திர கட்சியில் தற்போது இரண்டு பிரிவுகள் இல்லை என்று, முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.
மகிந்தவுக்கு வேட்புரிமை வழங்கியதன் பின்னர், இந்த பிளவு தவிர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, July 5, 2015
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
வட கிழக்கு மகாண உளவள ஆலோசகர்களுக்கான விஷேட பயிற்சி வகுப்பு அண்மையில் மனநல பயிற்சி நிறுவனம், அங்கொடையில் இடம் பெற்றது.
-
பஸ்யால பகுதியில் பொலிஸாரின் ஆணையை மீறி, பயணித்த மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
-
பசுபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா என்ற தீவில் 8 கால்கள் கொண்ட விசித்திரமான நாய்க்குட்டி ஒன்று பிறந்திருப்பது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த...
-
யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு பஸ் ஒன்றில் கேரளா கஞ்சாவை கொழும்புக்கு கொண்டுவர முயற்சித்தபோது கனகராயன்குளம் பகுதியில் கைது செய்யப்பட்ட மூன்...

No comments:
Post a Comment
Leave A Reply