திருகோணமலையிலுள்ள ‘கோட்டா’ தடுப்புமுகாம் பற்றிய தகவல் உட்பட வடக்கு, கிழக்கில் காணாமற்போனோர் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் சுட்டிக்காட்டிய விடயங்களை தான் ஜனாதிபதியின் கவனத்துக்கு உடன் கொண்டுவருவார்
என்று பொதுமக்கள் பாதுகாப்பு அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற சாட்சிகள் பாதுகாப்புத் தொடர்பிலான சட்டவரைபு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“வடக்கு, கிழக்கில் காணாமற்போனோர் தொடர்பிலும் கோட்டா முகாம் பற்றியும் சுரேஷ் எம்.பி. குறிப்பிட்டிருந்தார்.
இவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரும் விடயங்களாகும். எனவே, அது பற்றித்தான் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வருவேன்” என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பிலும் மீள் விசாரணை ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, February 20, 2015
கோட்டாவின் இரகசிய முகாம்!!! படுகொலைகள் தொடர்பிலும் மீள் விசாரணை ஆரம்பிக்கப்படும்!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
திருகோணமலையிலுள்ள ‘கோட்டா’ தடுப்புமுகாம் பற்றிய தகவல் உட்பட வடக்கு, கிழக்கில் காணாமற்போனோர் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பி...
-
வட கிழக்கு மகாண உளவள ஆலோசகர்களுக்கான விஷேட பயிற்சி வகுப்பு அண்மையில் மனநல பயிற்சி நிறுவனம், அங்கொடையில் இடம் பெற்றது.
-
பஸ்யால பகுதியில் பொலிஸாரின் ஆணையை மீறி, பயணித்த மோட்டார் சைக்கிள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
-
பசுபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா என்ற தீவில் 8 கால்கள் கொண்ட விசித்திரமான நாய்க்குட்டி ஒன்று பிறந்திருப்பது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த...

No comments:
Post a Comment
Leave A Reply