தகவல் - எம் ஹாத்தீம்:மாகாண மற்றும் தேசிய கலை இலக்கிய போட்டியில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கல்முனை பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் வி.பற்பராசா தலைமையில் இடம்
பெற்றது. இதில் பிரதம அதிதிகளாக கல்முனை பிரதேச செயலாளர் ஏ.மங்களராச்சி, சிரேஷ்ட முகாமைத்துவ உத்தியோகத்தர் ரம்சான், கரையோர பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஜெஸுர், முன்னால் பிரதேச சபை உறுப்பினர் எல்.ஏ.அஸீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
50 போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டு பரிசில்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment
Leave A Reply