எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, June 5, 2014
மலேசிய விமானம் நடுவானில் எரிந்து இந்திய பெருங்கடலில் விழுந்ததாக பரபரப்பு தகவல்
மலேசியாவில் இருந்து புறப்பட்டு மாயமான விமானம், நடுவானில் தீப்பிடித்து எரிந்து இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலேசிய விமானத்தைத் தேடும் பணிகள் பல கட்டங்களாக நடைபெற்று வந்த போதிலும், அதைப் பற்றிய எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
இந்த நிலையில், அவுஸ்திரேலியாவிலிருந்து, 4,500 கி.மீ., தொலைவில், இந்திய பெருங்கடலின் தென் பகுதியில், விமானம் ஒன்று கடலில் வீழ்ந்தது போன்ற சத்தம், கடலுக்கடியில் நிறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கருவி ஒன்றில் பதிவாகி இருப்பதாக, அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
அதே சமயம், கேரளாவில் இருந்து தாய்லாந்திற்கு கடலில், சொகுசு படகில் பயணித்த, பிரிட்டனை சேர்ந்த கேதரின் என்ற பெண், ”செம்மஞ்சல் நிறத்தில் தீப்பிடித்த நிலையில், விமானம் ஒன்று கடலில் விழுந்ததை பார்த்தேன். அது விமானமாக இருக்கும் என முதலில் நினைக்கவில்லை. இப்போது அது, மாயமான மலேசிய விமானமாகத் தான் இருக்கும் என கருதுகிறேன்,” என தெரிவித்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
எனினும் இந்த தகவல்கள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கற்பாறைகள் சரிந்து வீழ்ந்தமையால் எல்ல – வெல்லவாய வீதியூடான வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
-
கனேமுல்ல பஹல யாகொட பகுதியில் துணி வியாபாரி ஒருவரிடம் கப்பம் கோரி மரண அச்சுறுத்தல் விடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
கண்டி, பதுளை ஆகிய மாவட்டங்களில் நேற்றிரவு முதல் இன்றிரவு 8.30 வரை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
குருநாகல், பொதுஹர ரயில் விபத்தின் பின்னர் வடக்கு மார்க்கத்தில் இன்று காலை முதல் அலுவலக ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
Leave A Reply