எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, June 5, 2014
மலேசிய விமானம் நடுவானில் எரிந்து இந்திய பெருங்கடலில் விழுந்ததாக பரபரப்பு தகவல்
மலேசியாவில் இருந்து புறப்பட்டு மாயமான விமானம், நடுவானில் தீப்பிடித்து எரிந்து இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலேசிய விமானத்தைத் தேடும் பணிகள் பல கட்டங்களாக நடைபெற்று வந்த போதிலும், அதைப் பற்றிய எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
இந்த நிலையில், அவுஸ்திரேலியாவிலிருந்து, 4,500 கி.மீ., தொலைவில், இந்திய பெருங்கடலின் தென் பகுதியில், விமானம் ஒன்று கடலில் வீழ்ந்தது போன்ற சத்தம், கடலுக்கடியில் நிறுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கருவி ஒன்றில் பதிவாகி இருப்பதாக, அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
அதே சமயம், கேரளாவில் இருந்து தாய்லாந்திற்கு கடலில், சொகுசு படகில் பயணித்த, பிரிட்டனை சேர்ந்த கேதரின் என்ற பெண், ”செம்மஞ்சல் நிறத்தில் தீப்பிடித்த நிலையில், விமானம் ஒன்று கடலில் விழுந்ததை பார்த்தேன். அது விமானமாக இருக்கும் என முதலில் நினைக்கவில்லை. இப்போது அது, மாயமான மலேசிய விமானமாகத் தான் இருக்கும் என கருதுகிறேன்,” என தெரிவித்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
எனினும் இந்த தகவல்கள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
அன்பின் சகோதர்களே! உலகில் நடைபெரும் முஸ்லிம்களுக்கு எதிரான அநீயாயத்தில் நாம் என்ன பாடங்களை கற்று வருகின்றோம். எனக்கும் முஸ்லிம் உம்மா...
-
யாழ்.குடாநாட்டில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட ஆளில்லாவிமானம் வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும...
-
8 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவர், நஞ்சருந்திய நிலையில், சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் |||ஆம் தரத்திர்க்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை..
No comments:
Post a Comment
Leave A Reply