காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி
ஆணைக்குழு மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்த இரண்டாம் கட்ட அமர்வில்
புதிதாக 212 முறைப்பாடுகளை பதிவுசெய்துள்ளது.
மட்டக்களப்பு
மாவட்டத்தில் காணாமற்போனோர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற 195
முறைப்பாடுகளுக்கான சாட்சி விசாரணைகள் இடம்பெற்றதாக காணாமற்போனோர் தொடர்பான
முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர்
எச.டபிள்யூ.குணதாச தெரிவித்தார்.
இந்த அமர்வில் பதிவுசெய்யப்பட்ட
சாட்சியங்களில் அதிகமானவை காத்தான்குடி – குருக்கள் மடத்தில் காணப்படுவதாக
கூறப்படும் மனித புதைகுழி தொடர்பிலேயே முன்வைக்கப்பட்டுள்ளன.
காணாமற்போனோர்
தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இரண்டாம் கட்ட சாட்சிப் பதிவுகள் கடந்த ஆறாம்
திகதி காத்தான்குடி பிரதேச செயலகத்தில் ஆரம்பமானது.
மட்டக்களப்பில் நேற்றைய தினத்துடன் அமர்வுகளை நிறைவு செய்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதனைத்
தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் அடுத்த மாதம் ஆணைக்குழுவின்
அமர்வுகள் இடம்பெறவுள்ளதாக அதன் செயலாளர் எச.டபிள்யூ.குணதாச தெரிவித்தார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Tuesday, June 10, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
கற்பாறைகள் சரிந்து வீழ்ந்தமையால் எல்ல – வெல்லவாய வீதியூடான வாகனப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
-
கண்டி, பதுளை ஆகிய மாவட்டங்களில் நேற்றிரவு முதல் இன்றிரவு 8.30 வரை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
உ ங்களது பகுதி செய்திகளை எங்கள் பக்கத்தில் பிரசுரிக்க. உ ங்கள் பகுதியில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பிலான அறிவித்தலை வெளியிட. உ ங...
-
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சாட்சியமளிக்கவுள்ளதாக நோர்வேயின் முன்னாள் சிறப்பு தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் கூறிய கருத்து நகை...

No comments:
Post a Comment
Leave A Reply