பாரதத்தின் 15ஆவது பிரதமராக பாரதீய ஜனதாக் கட்சியின் நரேந்திர மோடி பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையான ராஷ்ட்ரபதி பவனில் இந்த பதவிப் பிரணமான நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.
இந்த
வைபவத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி
ஹமீட் கர்ஷாய், மாலைத்தீவு ஜனாதிபதி அப்துல்லாஹ் யாமின், இலங்கை ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸ, பூட்டான் பிரதமர் ஷெரிங்க் டொப்கே மற்றும் நேபாள பிரதமர்
சுஷில் கொய்ரால ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக்
ஹசினா ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதால் அவர் சார்பில் பங்களாதேஷ்
சபாநாயகர் ஷிரின் ச்சௌத்திரி இந்தியப் பிரதமரின் பதவியேற்பு வைபவத்தில்
கலந்துகொண்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ்
கட்சியின் தலைவர் சோனியா காந்தி இந்தியப் பிரதமரின் பதவிப் பிரமாண
நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
இந்தியாவிலுள்ள மாநிலங்களின்
முதலமைச்சர்களுக்கு இந்த வைபவத்தில் கலந்துகொள்வதற்கான அழைப்பு
விடுக்கப்பட்டிருந்தபோதிலும், தமிழக முதல்வர் ஜெயலிலிதா ஜெயராம் இந்தியப்
பிரதமரின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்துகொள்வதை நிராகரித்துள்ளார்.
இந்தியப்
பிரதமர் ஒருவரின் பதவிப் பிரமாண வைபவத்தில் அதிகளவிலான அரச தலைவர்கள்
கலந்துகொண்ட முதலாவது சந்தர்ப்பமாகவும் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண
வைபவம் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
யாழ் நகரப்பகுதிக்கு அண்மையில் உள்ள கலவன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்பித்த ஆசிரியருக்கு காதல் கடிதம் கொடுத் துள்ளார் உயர் தர வகுப்பில் கல்...
-
தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் உள்ளவர்களிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 1333 என்ற இலவச தொலைபேசி எண்அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது....
-
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைக்கக் கூடாதென்றும், அதனை பா.ஜ.க. அனுமதிகக் கூடாதென்றும் கோரி, தமிழகத்திலுள்ள பா....
-
காபூல்: ஆப்கானிஸ்தானில் கடந்த 3 நாட்களாக பெய்த கடும் மழை வெள்ளத்தில் சிக்கி 100 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்து...

No comments:
Post a Comment
Leave A Reply