அமெரிக்காவில் உள்ள Maryland நகருக்கு அருகில் உள்ள Wills Memorial சிறுவர்கள் பூங்காவில் தான் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பூங்காவில் பெண் ஒருவர் தன் குழந்தையை நீண்ட நேரமாக ஊஞ்சலில் வைத்து ஆட்டிக்கொண்டு இருப்பது சந்தேகமாக உள்ளது என அப்பகுதியிலிருந்து பொலிசாருக்கு நேற்று ஒரு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து, அதிகாலை 6.55 மணியளவில் பூங்காவிற்கு சென்ற பொலிசார், தாயார் ஒருவர் தனது குழந்தையை ஊஞ்சலில் ஆட்டிக்கொண்டு இருப்பதை கண்டனர்.
இது மிக சாதாரண சம்பவம் தான் என எண்ணி அந்த பெண்ணிற்கு அருகில் சென்ற பொலிசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏனெனில் 3 வயதான அந்த குழந்தை ஏற்கனவே இறந்து போயிருந்ததையும், இறந்த உடலை தான் அந்த பெண் ஊஞ்சலில் வைத்து ஆட்டிக்கொண்டு இருந்ததையும் பொலிசார் கண்டறிந்துள்ளனர்.
பொலிசார் விசாரித்த போது 24 வயதான அந்த பெண் எந்த பதிலும் அளிக்கவில்லை. குழந்தையின் உடலில் எந்த காயமும் இல்லாத நிலையில், இறப்பிற்கான காரணத்தை அறிய பொலிசார் குழந்தையின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், குழந்தை இறந்ததால் தாயாருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகித்த பொலிசார், தாயாரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய பொலிஸ் அதிகாரியான Diane Richardson, தாயாருக்கு நேர்ந்துள்ள இந்த சம்பவம் மிகவும் மோசமானது.
இதுபோன்ற ஒரு சோகமான சம்பவத்தை தன் வாழ்நாளில் பார்த்ததே இல்லை எனக்கூறிய அவர், குழந்தையின் மரணம் குறித்து மருத்துவ பரிசோதனை முடிவுகளை எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எமது முகப்புத்தகம்
வாயிலாக பல சுவாரஸ்யமான பதிவுகளை உங்களது சுவரில் காண (LIKE US)
www.facebook.com/eastnewsfirst
No comments:
Post a Comment
Leave A Reply