சீகிரிய கண்ணாடிச் சுவரில் கிறுக்கிய குற்றத்திற்காக சிறை வைக்கப்பட்டுள்ள யுவதிக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
குறித்த யுவதிக்கு பொது மன்னிப்பு அளிக்கும் ஆவணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி 14ஆம் திகதியன்று மட்டக்களப்பை சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி என்ற யுவதி, சீகிரிய ஓவியங்கள் மீது கிறுக்கியிருந்தார்.
இந்தக் குற்றத்துக்காக குறித்த யுவதிக்கு இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேசிய அகழ்வாராய்ச்சி பொருட்களை பாதுகாக்கும் அதேநேரம் அறியாமை காரணமாக உதயசிறி செய்த தவறை உணர வேண்டும் என்று ஏற்கனவே வெளியுறவுத்துறையின் பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்திருந்தார்.
இதேவேளை, தமது மகளின் அறியாமையை உணர்ந்து அவளை மன்னிக்குமாறு உதயசிறியின் 74 வயது தாயும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, April 2, 2015
சீகிரிய கண்ணாடிச் சுவரில் கிறுக்கிய யுவதிக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
ஒருங்கிணைந்த இலங்கைக்குள், போதிய அதிகாரங்களுடன் மக்களின் வாழ்க்கையை செழுமைப்படுத்தக்கூடிய தீர்வையே விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப...
-
சிறுத்தையை தாக்கிக் கொன்ற கமலா தேவி என்ற இந்திய பெண் தொடர்பில் தற்போது ஊடகங்களில் பரவலாக பேசப்படுகிறது.
-
டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டயகம வேவர்லி தோட்டத்தில் இருந்து, டயகம நகரத்திற்கு வந்த 50வயது பெண் ஒருவரின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன...
-
MA Degree programme is a 2 year post-graduate course which is conducted in English medium only. It has 15 taught modules covering an arra...

No comments:
Post a Comment
Leave A Reply