blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, February 14, 2015

இலங்கை முழுவதும் wi-fi மூலம் இலவச இணைய சேவை!

ழுழுவதும் இலவச இணைய சேவையை வழங்கும் வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

wi-fi தொலைநுட்பத்தின் மூலம் நாடு முழுவதிலும் இலவச இணையச் சேவைகளை வழங்கும் வேலைத்திட்டம் அமுலாக்கப்படவுள்ளதாக தொலைத்தொடர்பாடல் அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்தார்.

இந்தப் பாரிய வேலைத்திட்டம் ஒன்றரை வருட காலத்திற்குள் அமுலாக்கப்படுமென களுத்துறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற வைபவத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்தின் மூலம் சகலருக்கும் இணைய வசதிகளை இலவசமாக வழங்கும் முதலாவது நாடென்ற பெருமையை சிறிலங்கா பெறவுள்ளது.

நாட்டிலுள்ள 500 அரச நிறுவனங்களுக்கு முதல் கட்டமாக இலவச இணைய வசதிகள் வழங்கப்படும்.
தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியுடன் இணைந்ததாக அரச சேவையிலும் பெரும் வளர்ச்சி தென்படுவதாக அமைச்சர் அஜித் பெரேரா குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►