எமது தளத்தை பார்வையிட்டோர்
80171
Thursday, July 17, 2014
ஜனாதிபதியின் காரை வாங்கிய ஜெயலலிதா குறிப்பிட்ட காலத்தில் வரியை செலுத்தாதது ஏன்? நீதிபதி கேள்வி!
ஜனாதிபதியின் காரை வாங்கிய ஜெயலலிதா குறிப்பிட்ட காலத்தில் அதற்கான வரியை செலுத்தாதது ஏன் என்று பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டிகுன்ஹா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் புதன்கிழமை 20வது நாளாக வாதங்களை முன்வைத்தார். 1992ம் ஆண்டில் குடியரசு தலைவரிடம் இருந்து வாங்கப்பட்ட காருக்கு 1993-94ம் ஆண்டில் வருமான வரி செலுத்தப்பட்டதாக ஜெயலலதா தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அப்போது குறிக்கிட்ட நீதிபதி மைக்கேல் டிகுன்ஹா, 1992ம் ஆண்டு செப்டம்பரில் வாங்கிய காருக்கு 1992-93ம் ஆண்டு வருமான வரி செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், காலதாமதமாக செலுத்தப்பட்டது ஏன்.!!~
ஜெயலலிதா வங்கிக் கணக்கில் அவ்வப்போது 50 லட்சம் ரூபாய், ஒரு கோடி ரூபாய் என்று டெபாசிட் செய்துள்ளாரே. இந்த பணம் எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பினார்.
ஜெயலலிதா தரப்பு வாதம் இன்றும் (வியாழன்) தொடர்ந்து நடைபெறுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிலோன்டொபாகோ நிறுவனத்தின் அதிகாரிகள் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்தியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன த...
-
நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு சில உணவுப்பொருட்களை கண்டிப்பாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
-
தமது புதல்வனின் முதலாவது மனைவியையும் பிள்ளையையும் கவனித்துக் கொண்டு அவர்களுடன் 76 வயது ஒய்வு பெற்ற ஆசிரியையான தமது தாயை கொடுமைப்படுத்திய ...
-
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. இப்போது வெளியானது ஒன்றும் இறுதித் தீர்ப்பு அல்ல என்று பா.ஜ.க. கருத்துத்...
No comments:
Post a Comment
Leave A Reply