அளுத்கம, பேருவளை பகுதிகளில் பெரும் வன்முறைகளை அடுத்து பொதுபல சேனாவின் பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டிருந்ததுடன், தற்போது, அதன் அங்கத்தவர்களின் பேஸ்புக் பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
எனது பேஸ்புக் தளம் முடக்கப்பட்டுள்ளது. இறுதியாக ஜூன் 25 ஆம் திகதி எனது பேஸ்புக் பக்கத்துக்கு நான் சென்றேன். ஏனைய அங்கத்தவர்களின் பேஸ்புக் பக்கமும் முடக்கப்பட்டுள்ளது' என பொது பல சேனாவின் பேச்சாளர் திலந்த விதானகே ரோய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.
கலகொட அத்தே ஞானசார தேரோவும் தனது பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிகள் ஸ்தம்பிதம்
லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அண்மையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் லக்ஸ்மி ஜயவிக்ரம இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அரச சேவை ஆணைக்குழுவின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. இதனால் புதிய நியமனங்களை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனால் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு நியமனங்களை மேற்கொள்வதில் சிக்கல் நிலைமை உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment
Leave A Reply