
PSLV C-23 என்ற ஏவுகணையை விண்ணுக்கு ஏவுவதற்காக ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் நடைபெற்ற வைபவத்தில் இன்று முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் மோடி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
05 செய்மதிகள் அடங்கிய ஏவுகணை இன்று முற்பகல் 9.52 அளவில் விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸ், ஜேர்மன், கனடா மற்றும் சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த செய்மதிகளே விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளன.
ஏவுகணை விண்ணுக்கு ஏவப்பட்டதன் பின்னர் கருத்து வெளியிட்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தெற்காசிய வலய ஒத்துழைப்பு சங்கத்திற்காக ஏவுகணை ஒன்றை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்க வேண்டுமென அவர் இதன்போது குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கை சார்க் வலய நாடுகளுக்கு இந்தியா வழங்கும் மிகச் சிறந்த பரிசு எனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply