அக்கரைப்பற்று கடலில் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
குறிப்பிட்ட இளைஞன் நண்பர்கள் சிலருடன் கடலுக்கு குளிக்கச் சென்றபோது, அலையில் அள்ளுண்டு காணாமல் போயிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளைஞனின் உடல் இன்று காலை கரையொதுங்கியிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.
பதுர்நகர் பகுதியைச் சேர்ந்த 17 வயதான இளைஞன் ஒருவரே கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply