இலங்கை இந்திய கடற்பரப்பில் வைத்து இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை குறித்து இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஆராய்கிறது.இன்று டெல்லியில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தின் போது, வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் இந்த விடயத்தை முன்கொண்டுவரவுள்ளார்.
ஏற்கனவே இந்த விடயம் தொடர்பில் அவர் நேற்றையதினம் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.
இலங்கை இந்திய மீனவர்களுக்கு இடையில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெறும் நோக்கில் இன்றைய கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment
Leave A Reply