அளுத்கம, தர்ஹாநகர், பேருவளை மற்றும் பெலிப்பன்னை பிரதேசங்களில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இனவெறித் தாக்குதலைக் கண்டித்து பொது அமைப்புக்களினால் ஏற்பாடு செய்திருந்த கண்டனம் தெரிவிக்கும் பேரணி இன்று வெள்ளிக்கிழமை கல்முகைக்குடி முகைதீன் ஜும்ஆ பெரியபள்ளிவாசல் முன்பாக இடம்பெற்றது.
அமைதியான முறையில் இடம்பெற்ற இக்கண்டன பேரணியில் 'முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு நியாயம் வழங்க வேண்டும்', 'பொதுபலசேனாவை தடை செய்ய வேண்டும்', 'இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு பொறுப்புக்கூற வேண்டும்' என்ற சுலோகங்கள் அடங்கியிருந்த பதாகைககைளைக் கையில் ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.
பெருந்திரளான இளைஞர்களும், பொதுமக்களும் கலந்து கொண்ட இப்பேரணியில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் பறகதுல்லா பங்கு கொண்டார்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Friday, June 20, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
வவுனியா நெடுங்கேணி வன பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் பின்னர் 3 சடலங்கள் மீட்கப்பட்டது. அதில் கோபி, தேவியன் இருவரின் சடலங்கள் கண்டற...
-
அவிசாவளை – புவக்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
-
யாழ்ப்பாணத்திலிருந்து சொகுசு பஸ் ஒன்றில் கேரளா கஞ்சாவை கொழும்புக்கு கொண்டுவர முயற்சித்தபோது கனகராயன்குளம் பகுதியில் கைது செய்யப்பட்ட மூன்...
-
யாழ்.குடாநாட்டில் மர்மமான முறையில் மீட்கப்பட்ட ஆளில்லாவிமானம் வர்த்தக நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும...


No comments:
Post a Comment
Leave A Reply