காட்டில் தேன் எடுக்கச் சென்ற இருவர் கரடியின் தாக்குதலுக்குள்ளாகி
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிசார்
தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று (24) மாலை மட்டக்களப்பு வாகரை கட்டு முறிவு காட்டில் இடம்பெற்றுள்ளது.
பால்சேனை கதிரவெளியைச் சேர்ந்தவர்களான கி.ஜெயரெட்ணம் வயது (38)
க.குணலிங்கம் வயது(30) ஆகிய இருவரே கரடியின் தாக்குதலுக்குள்ளாகி கதிரவெளி
ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மேலும்
தெரிவித்தனர்.
வழமைபோன்று தேன் எடுக்கும் தொழிலுக்கு அடர்ந்த காட்டிற்கு சென்ற வேளை
குட்டி ஈன்ற கரடி ஒன்று மேற்படி நபர்களை கண்;டதும் கோபம் கொண்டு
தாக்கியுள்ளது.
இதில் இருந்து தங்களை காப்பாற்றிக்கொள்வதற்;காக மரத்தில் ஏறி உயிர்
தப்பியுள்ளனர். இதனால் இவர்களின் கால்கள் மற்றும் கைகளில் காயம்
ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். இதேவேளை மேலும் ஒருவர் கடந்த ஒரு
வாரத்திற்கு முன்பு இதேபோன்று கரடியின் தாக்குதலுக்குள்ளாகி காயமுற்ற
நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, May 25, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாவற்காடு பகுதியில் யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின் போது சுமார் 1300 கிலோ மீன்கள் கைப்பற்றப்பட்...
-
நாள்தோறும் செய்யும் யோகப் பயிற்சியின் மூலம், தனது மனதையும் உடலையும் வலுவாக வைத்துள்ளார் 93 வயது நானம்மாள் பாட்டி. நானம்மாளின் சொந்த ஊர் ...
-
இலங்கையிலுள்ள தமிழர்களின் அபிலாஷைகளுக்கு தீர்வு காணக்கூடிய அரசியல் தீர்வொன்றையே இந்தியா விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.
-
திருகோணமலை நகர எல்லைக்குள் செயற்படும் தனியார் கல்வி நிலையங்கள் மாலை 6 மணிக்குப் பின்னர் பிரத்தியேக வகுப்புக்களை நடத்தக் கூடாதென நகர சபைக் ...

No comments:
Post a Comment
Leave A Reply