
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக பிரதிநிதிகள் என்ற போர்வையில் போலி அடையாள அட்டையுடன் சிலர் பண மோசடியில் ஈடுபட்டிருப்பதாக பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொது முகாமையாளருமான மங்கல ரன்தெனிய தெரிவிக்கின்றார்.
வீடுவீடாக சென்று பணம் திரட்டும் நடவடிக்கைகள் எதனையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முன்னெடுக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
காப்புறுதி இழப்பீடு வழங்கப்படுவதாக தெரிவித்து, அதன்பொருட்டு குறிப்பிட்ட தொகை பணத்தை மோசடி பேர்வழிகள் சிலர் அறவிடுவதாக தகவல்கள் கிடைத்திருப்பதாக பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இத்தகைய பண மோசடியில் ஈடுபடுகின்ற எவரேனும் வெளிநாட்டு தொழில் புரிவோரின் வீடுகளுக்கு சமூகமளித்தால், அவர்கள் குறித்து உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு பணியகத்திற்கு அறிவிக்குமாறு மங்கல ரன்தெனிய கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment
Leave A Reply