கிளிநொச்சி திருநகர்ப் பகுதியில் வெடிபொருள் வெடித்ததில் சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (18) காலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
திருநகரினைச் சேர்ந்த மாணிக்கதியாகராஜா விஜயயாதவன் (12) என்ற சிறுவனே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த சிறுவன் வியாபார நிலையமொன்றில் பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். சென்ற வீதியில் கிடந்த உருண்டை வடிவிலான இனம் தெரியாத மூன்று பொருட்களை கண்டெடுத்துள்ளார்.
அந்த மூன்று பொருட்களில் இரண்டை தனது காற்சட்டை பைகளில் வைத்ததுடன், மிகுதி ஒன்றினை கையில் வைத்து எறிந்து விளையாடியுள்ளான்.
இதன்போது, எறிந்த குறித்த பொருள் பெரும் சத்தத்துடன் வெடித்ததாகவும் இதனால் சிறுவன் படுகாயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Sunday, May 18, 2014
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
சாவற்காடு பகுதியில் யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறைத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின் போது சுமார் 1300 கிலோ மீன்கள் கைப்பற்றப்பட்...
-
திகாமடுல்லை மாவட்டம் - பொத்துவில் தேர்தல் தொகுதி
-
நாள்தோறும் செய்யும் யோகப் பயிற்சியின் மூலம், தனது மனதையும் உடலையும் வலுவாக வைத்துள்ளார் 93 வயது நானம்மாள் பாட்டி. நானம்மாளின் சொந்த ஊர் ...
-
திருகோணமலை நகர எல்லைக்குள் செயற்படும் தனியார் கல்வி நிலையங்கள் மாலை 6 மணிக்குப் பின்னர் பிரத்தியேக வகுப்புக்களை நடத்தக் கூடாதென நகர சபைக் ...

No comments:
Post a Comment
Leave A Reply