
எனினும் ஜனாதிபதியின் இந்த அழைப்பை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நிராகரித்துள்ளார்.
இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் போராசிரியர் ஜீ.எல்.பீரிஸிற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே அவர் தனது நிராகரிப்பை தெரிவித்துள்ளார்.
குறித்த அழைப்பை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் அது மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண சபைக்கும் இடையில் மிக
வலுவான ஐக்கியம் இருப்பதாக அது எடுத்துக்காட்டக் கூடும் என்பதால் அந்த அழைப்பை நிராகரிப்பதாக அந்த கடித்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடமாகாண மக்கள் மத்தியில் தொடர்ந்து நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினர் மக்களைப் பதட்டத்துடன் வாழ செய்து வருகின்றார்கள் என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் வடமாகாணசபையைப்
பொறுத்தவரையில் அவர்களின் நடவடிக்கைகள் பலவாறாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதுமே உண்மை நிலையாகும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இவ்வாறான அழைப்பை தாம் ஏற்றுக் கொண்டால் அது உண்மை நிலையை மறைத்து முகமனுக்காக ஏற்றுக்கொள்வதாக அமையும் என சி.வி.விக்னேஸ்வரன் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிற்கு அனுப்பி வைத்துள்ள கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடித்தின் முழு விபரம் வருமாறு
கௌரவ பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அவர்கள் 23.05.2014
பாராளுமன்ற உறுப்பினர் வெளிவிவகார அமைச்சர்
கௌரவ அமைச்சரவர்களுக்கு,
இன்றைய திகதிய உங்கள் தொலைநகல் கிடைக்கப் பெற்றேன். இந்தியப் பிரதமராகப் பதவியேற்கப்போகும் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொள்ள தாமதமாகியேனும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் எனக்கனுப்பிய அழைப்பைத் தெரியப்படுத்தியமைக்கு நன்றி.
எமது அமைச்சர் குழாமுடன் பேசியதன் பின் இந்தப் பதிலை உங்களுக்கு அனுப்புகின்றேன். ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தேர்தல் வெற்றியானது இலங்கை அரசாங்கத்தினரிடத்தில் வடமாகாணத்துடன் கூட்டுறவையும் ஒருங்கிணைந்து செயற்படும்
தன்மையையும் எழுப்பியுள்ளமை நல்லதொரு சகுணமே.
வடமாகாண மக்களின் சொல்லொண்ணாத் துயரங்கள், வடமாகாணசபையை இயங்கவிடாது ஏற்படுத்தப்பட்ட தடைகள் இவற்றின் மத்தியில் இக் கூட்டுறவு சிந்தனையானது வரவேற்கத்தக்கதே.
எனினும் உங்களுடைய அன்பான அழைப்பை ஏற்க முடியாதிருப்பதற்காக வருந்துகின்றேன்.
முக்கியமாக அவ்வாறு ஏற்காததற்குக் காரணம் மத்திக்கும் மாகாணத்திற்குமிடையில் மிக வலுவான ஐக்கியம் இருப்பதாக அது எடுத்துக்காட்டக் கூடும் என்பதேயாகும்.
எனினும் வடமாகாண மக்கள் மத்தியில் தொடர்ந்து நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினர் மக்களைப் பதட்டத்துடன் வாழவே செய்து வருகின்றார்கள் என்பதும் வடமாகாணசபையைப் பொறுத்தவரையில் அவர்களின் நடவடிக்கைகள் பலவாறாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பதுமே
உண்மை நிலையாகும்.
இவ்வாறான அழைப்பை நான் ஏற்றுக் கொண்டால் உண்மை நிலையை
மறைத்து முகமனுக்காக ஏற்றுக்கொள்வதாக அமையும். எனினும் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரூடாக இந்தியப் பிரதமராகப் பதவியேற்கும் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களை நான் ஏற்கனவே அனுப்பியுள்ளேன் என்பதைத் தெரியத்
தருகின்றேன்.
உங்களுடைய அன்பார்ந்த அழைப்பால் பிரதிபலிக்கப்படும் நல்லெண்ணமும் ஒருமைப்பாட்டு உணர்வும் எமக்குள் தொடருமென்று நான் எதிர்பார்க்கின்றேன். அவ்வாறு தொடர்ந்தால்த்தான் வடமாகாண மக்களின் தேர்தல் எதிர்பார்ப்புக்கள் நடைமுறைபடுத்தப்படுவன மட்டுமன்றி எமது
மக்களின் அடிப்படை உரிமைகளும் பாதுகாக்கப்படுவன.
நன்றி.
அன்புடன்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்
No comments:
Post a Comment
Leave A Reply