blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, April 19, 2014

உழவு இயந்திர விபத்தில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை நிறைவு

அரலகங்வில அளுத்ஓயா பகுதியிலுள்ள  இசெட் டீ வாய்க்காலுக்குள்  சிறிய ரக உழவு இயந்திரமொன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த  ஒன்பது பேரின் பிரேத பரிசோதனை நிறைவுபெற்றுள்ளது.

இந்த விபத்தில் பலியான மற்றுமொருவரது பிரேத பரிசோதனை இன்று நடைபெறவுள்ளது.
21 பேருடன் பயணித்த சிறிய ரக உழவு இயந்திரமொன்று அரலகங்வில இசெட் டி வாய்க்காலுக்குள் நேற்றுப் பகல்  விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.

இவர்களில் நான்கு சிறுவர்களும் அடங்குகின்றனர்.
இந்த விபத்தில் காயமடைந்த நால்வர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த அனைவரும் உறவினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
சித்திரைப் புத்தாண்டை கொண்டாடும் நோக்கில் அரலகங்வில பகுதியிலுள்ள உறவினர்களின் வீட்டிற்குச் சென்றுக்கொண்டிருந்த வேளையில் இவர்கள் இந்த விபத்தில் சிக்கியிருந்தனர்.

உழவு இயந்திரம் வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கு காரணம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►