blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, April 19, 2014

ஐ.தே.க பாராளுமன்ற குழு மீதான தாக்குதல் கவலைக்குரியது – அசாத் சாலி

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் குழுமீது ஹம்பந்தோட்டையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல்கள் மிகவும் கவலைக்குரியதென தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

நாட்டின் முக்கியஸ்தர்களுக்கு இவ்வாறான தாக்குதல்கள் காணப்படுமாயின் பொது மக்களின் நிலை தொடர்பில் கூறுவதற்கு ஒன்றும் இல்லையென அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இடம்பெற்ற இடமானது சபாநாயகர் சமல் ராஜபக்ஸவின் பிறந்த ஊரென ​தெரிவித்துள்ள அசாத் சாலி, இது சபாநாயகரையும் இழிவுப்படுத்தும் செயலெனவும் கூறியுள்ளார்.
சபாநாயகர் பதவி விசேடமானதென கூறி அதனை கையாளும் சமல் ராஜபக்ஸ நாட்டில் சரியான விடயங்கள் இடம்பெற வேண்டும் என்று பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் குரல்கொடுப்பவராகவே உள்ளார் என அசாத் சாலியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழுவினர் மீது   மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் நேரடியாக தலையிட்டு விசாரணைகளை முன்னெடுக்குமாறும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர், சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►