கதிர்காமம் தெட்டகமுவ வாவிக்குள் வாகனமொன்று விழுந்ததில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
கண்டியில் இருந்து கதிர்காமத்திற்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்தவர்களே விபத்தில் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறியுள்ளார்.உயிரிழந்த ஐந்து பேரது சடலங்களும் கதிர்காமம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக கதிர்காமம் வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டொக்டர் ஆர்.பி.சரத் தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை 5.45 அளவில் இந்த சடலங்களை கதிர்காமம் பொலிஸார் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிர்த்தப்பிய சிறுவன் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் மாவட்ட வைத்திய அதிகாரி கூறியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply