கிளிநொச்சி ஏ ஒன்பது வீதியில் இன்று முற்பகல் லொறியொன்று
விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர்
காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏ
ஒன்பது வீதியில் பயணித்த லொறி, மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு வழிவிட
முற்பட்டவேளை வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியுள்ளதாக பொலிஸார்
தெரிவித்தனர்.
இதேவேளை, பண்டாரவளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பாடசாலை மாணவர்கள் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் இன்று காலை காருடன் மோதியதில் இவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply