இஸ்லமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லமாபாத்தில் காய்கறி மார்க்கெட்டில் நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில், மார்க்கெட்டுக்கு வந்திருந்த அப்பாவி மக்கள் 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாயினர். மேலும் 100க்கும்
மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், மீட்புக் குழுவினரின் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பாகிஸ்தான் போலீசார், நடத்திய முதற்கட்ட விசாரணையில் பாகிதான் தலிபான் தீவிரவாத கும்பல் செய்த நாசவேலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்துவருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
வில்பத்து தேசிய சரணாலயத்தின் எல்லைப் பகுதியிலுள்ள இடமொன்றில் துப்பாக்கி வெடித்ததில் இருவர் காயமடைந்துள்ளனர். ...
-
நீர்நிலைகளில் வாழும் உயிரினம் முதலை. சேறு மற்றும் மண் நிறைந்த நீர்நிலையில் வசித்து வந்த முதலை ஒன்று மதிய வேளையில் இரை தேடி அலைந்து கொண்ட...

No comments:
Post a Comment
Leave A Reply