கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் 6
அரசியல் கட்சிகளும் அமைச்சு பதவிகளை கோருவதால், அமைச்சரவையை நியமிப்பது
மேலும் தாமதமாகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
மாகாண சபையில் தேசிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்ததுடன் நிர்வாகத்திலும் இணைந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய சுதந்திர முன்னணி ஆகியன அங்கம் வகித்து வருகின்றன.
எவ்வாறாயினும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அடுத்த சில தினங்களில் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி இணக்கப்பாட்டுக்கு வர எண்ணியுள்ளதாக அந்த கட்சியின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply