நான் ஊழல் செய்ததாக என்னை குற்றம் சாட்டும் அப்துர் றஹ்மான், சிப்லி பாறூக், முபீன், மர்சூக் போன்றவர்களால் நான் அதிகார துஸ்பிரயோகம், ஊழல் செய்திருப்பதாக பேசி இருக்கின்றீர்களே, அப்படியாயின் அவ்வாற விடயங்களை உங்களால் நிரூபிக்க முடியுமா?
உங்களால் முடியாது. ஏனெனின் நாங்கள் மிக தெளிவாக இருக்கின்றோம்.
நாங்கள் இந்த சமூகத்திற்கு எப்படிப் பட்ட பணிகளை செய்திருக்கின்றோம் என்பதனை இன்று உங்களோடு இருக்கின்ற பொறியியலாளர் சிப்லி பாறூக்கிற்கு நன்கு தெரியும். ஊழல், மோசடி, அதிகார துஸ்பிரயோகம், செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்த புதிய அரசாங்கத்தில் நிறைய வாய்ப்புள்ளது. ஆதற்கான தெலைபேசி இலக்கம், மின்னஞ்சல் என்பவற்றுடன் ஒரு புதிய அமைச்சரும் தயாராக உள்ளார்.
நான் இன்று ஒரு சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் மாத்திரம்தான் என்னிடம் அதிகாரமில்லை. முடிந்தால் என் தொடர்பான முறைப்பாட்டினை எழுத்து மூலம் தெரிவியுங்கள் என இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது முன்னால் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் சவால் விடுத்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply