தமிழ்நாட்டின் நெல்லை பகுதியில் இடம்பெற்ற நாம் தமிழர் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவர் சீமான் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது விமானங்களை கடத்தும் தலீபான் தீவிரவாதிகள் மிரட்டுவது போல உள்நாட்டு மக்களை சிறைபிடித்து இலங்கை இந்தியாவை மிரட்டுகிறது.எனவே இலங்கையை தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர்களை தாக்கி வந்த சிங்களவர்கள் தற்போது இஸ்லாமியர்களையும் தாக்க தொடங்கியுள்ளனர்.
அத்துடன் இலங்கையில் தமிழ் இனத்தையே அழிக்க நினைக்கிறார்கள் எனவும் இலங்கை ஜனநாயக நாடு என்று கூறுபவர்கள் இதை உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை புதிதாக பதவியேற்றுள்ள மத்திய அரசு தமிழர்கள் நலனில் சிறப்பாக செயல்படும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply